×

கத்துக்குத்து குற்றவாளிகள் கைது கோரி நிலக்கோட்டை காவல் நிலையம் முற்றுகை

வத்தலக்குண்டு, டிச. 10: நிலக்கோட்டை அருகே அக்கரகாரப்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார். டிரைவர். இவரை கடந்த நவ. 27ம் தேதி அணைப்பட்டி சாலையில் முன்விரோதம் காரணமாக துரைச்சாமிபுரத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அருண்குமார் தற்போது மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் பாண்டிசெல்வம், தமிழரசன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்து ஒருவரை மட்டும் கைது செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில் 15 நாட்களாக முக்கிய குற்றவாளிகளை கைது செய்யாமல் போலீசார் காலம் தாழ்த்தி வருவதாக கூறி அருண்குமாரின் உறவினர்கள், ஊர்மக்கள் என 100க்கும் மேற்பட்டோர் நேற்று நிலக்கோட்டை காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். உடனடியாக அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டிஎஸ்பி முருகன் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து குற்றவாளிகளையும்  2 நாட்களில் கைது செய்து விடுவதாக, உறுதி அளித்தார். அதன்பிறகே அனைவரும் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Siege ,police station ,Nilakkottai ,arrest ,
× RELATED தேவர்குளம் காவல்நிலைய பிரச்சனை...